வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

'பொங்கல்' உலகத் தமிழர்களின் உன்னதத் திருவிழா. இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து இயற்கையோடு இரண்டறக் கலந்த இனிய தமிழர்களின் இல்லப் பெருவிழா. படைத்த இயற்கைக்கும், இயற்கை படைத்த உணவிற்கும் நன்றி தெரிவிக்கும் இல்லத் திருவிழா. பாட்டாளிகள் விதைத்த வியர்வைகள் விளைச்சல்கள் காணும் அறுவடைத் திருவிழா. உழைப்பாளிகள் ஓயாமல் உழைத்த உழைப்பின் உன்னதங்களைச் சந்தைக்குக் கொண்டு வந்த சத்தியத் திருவிழா."மண் என்பது மண்ணல்ல, மண் எனபது மனிதர்கள்" என்ற கவிதைக்கேற்ப புழுதிக்காட்டு மண்ணைத் திருநீராகவும், சுடர்விட்டு எரியும் சூரியனைத் திருவிளக்காகவும் வழிபட்ட வண்ணத் தமிழனின் வரலாற்று பெருவிழா.பூமி தந்த அன்னத்தையும் , அன்னத்தைத் தந்த விவசாயிகளையும் மரியாதை செய்யும் ஒரு நாள் பொங்கல் திரு நாள். இந்த இனிய திரு நாளில் தமிழ் உணவு, தமிழ் உடை, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பழக்கவழக்கம், தமிழ் கல்வி போன்ற தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்போம்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்.பொங்கலோ பொங்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக