திங்கள், 26 ஏப்ரல், 2010

காதல் குறட்பாக்கள்: 7

மதயானைக்குப் போர்த்திய
முகபடாமாக
முந்தானை மறைத்திருக்கிறது
மலர்ந்து நிமிர்ந்த
உன் மார்பழகை.
அந்த
கோபுரக்கலசங்களின்
தரிசனங்கள் கிடைக்காதா?
என் விழிகளுக்கு
விலங்கு மாட்டும்
உன்
ஆடைகளை சபிக்கிறேன்...!
------------------------------------
குறள்:1087
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

1 கருத்து:

  1. முகப்புத்தகத்தில் கடுமையான விவாதத்தையும் விமர்சனங்களையும் இலக்கிய சண்டைகளையும் உருவாக்கிய கவிதை இது..

    பதிலளிநீக்கு