எல்லோரும்
குவளையில் மலர்வளர்ப்பார்கள்
அன்பே
நீ மட்டும் எப்படி
குவளை மலர்களையே
உன் கண்களில் வளர்க்கிறாய்.
அந்தோ...
உன் கருவிழிகளுக்கு
ஈடுகொடுக்கவியலாமல்
தலைக் கவிழ்ந்தன
குவளைமலர்கள்.
---------------------------------------------------
குறள்:1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக