இமை அணைக்கட்டுகளை
உடைத்துக்கொண்டு
என்
கன்னப்பிரதேசங்களில் பெருக்கெடுத்தது
கண்ணீர் வெள்ளம்.
நான்
ரகசியமாய் துடைத்ததை
கவனித்துவிட்டு
"ஏ அழறீங்க? அழாதீங்க?"
என்ற கேள்விக்கு
"கண்ணுலே தூசு விழுந்துடுச்சி "
என்று
பதில்சொன்ன பிறகுதான்
நின்றது
என் மகனின் அழுகை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக