வியாழன், 22 ஜூலை, 2010

தனித்து போராடு!

நெருப்புத் துண்டங்களைப் போலிருக்கும்
நட்சத்திரங்கள் உதிர்ந்து
கண்கள் குருடாடிவிடுமோ?
அக்கினி பந்தாய் எரியும்
சூரியன் உடைந்து விழ
கபாலம் இரண்டாகுமோ?
ராட்சச வானம்
பொடிபொடியாய் சிதறி
புதைகொள்ள செய்யுமோ?
என்ற பயம் தொற்றிக்கொள்ள
இரவுமுழுவதும்
இடைவிடாமல் போராடி இருக்கக்கூடும் ...

தோற்ற மல்யுத்த வீரனைப்போல
எதேச்சையாய்
மல்லாக்காய் கவிழ்ந்துபோன
அந்த
கரப்பான் பூச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக