ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஒப்பாரி

ஊர்கூடி அழும் சத்தம்
எல்லா ஜீவராசிகளின்
காதுகளில் கேட்கிறது.
யாரோ ஒருவர் இறந்துபோய் இருந்தார்.

அந்த பூதவுடல் மீது
அஞ்சலிக்காக
கோடிமலர்களின் கழுத்துகள்
அறுக்கப்பட்டு போடப்பட்டிருந்தன ..

இப்போது கேட்கிறது
அங்கே
தேனீக்களின் ... ஒப்பாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக