சணல் கயிறுகளால்
கிழிபட்டு குருதிகசிந்து
சீழ் பிடித்திருந்த
உள்நாசி வலிகளையும்;
கூரிய நகங்களால்
பீய்த்தெரியப்படுவதைப் போல
கறக்கப்பட்ட முலைக்காம்புகளின்
ரணங்களையும்;
ஞாபகப்படுத்துவதே இல்லை
தன் கன்றுக்கு
கொஞ்சம்கூட வைக்காமல்
தங்கள் பிள்ளைகளுக்காக
வளர்ப்பவர்கள் வாரிக்கொண்டு போகும்போது
ஞாபகப் படுத்துவதே இல்லை
தாய் பசுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக