ஞாயிறு, 4 ஜூலை, 2010

காதல் குறட்பாக்கள்

வண்ண நிலவு எது ?
வஞ்சி வதனம் எது ?
விழிசிமிட்டி விழிக்கின்றன
வானில் விண்மீன்கள்.

அன்பே !
உனதழகு
கண்மீன்களைத்தான்
கரைதாண்ட வைக்கிறதென்றால்
விண்மீன்களையும்
விழிசிமிட்டவைக்கிறதே !
---------------------------------
குறள்:1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக