தொட்டுத்துடைக்க யாருடைய விரலையும்
எதிர்ப்பார்க்காதே !
கண்ணீர் வந்தால் துடைத்துக்கொள்.
களிம்பு பூச யாருடைய கரத்தையும்
எதிர்ப்பார்க்காதே !
காயம் வலித்தால் பொறுத்துக்கொள்.
அன்னம்பெற யாருடைய இரையையும்
எதிர்ப்பார்காதே !
பசியை தின்று செரித்துக்கொள்.
பெருமிதம்கொள்ள யாருடைய இருக்கையையும்
எதிர்ப்பார்க்காதே !
தரையை சிம்மாசம் ஆக்கிக்கொள் .
மரியாதையைபெற யாருடைய முகஷ்துதியையும்
எதிர்ப்பார்க்காதே !
உன்னை நீயே வணங்கிக்கொள் .
வாழ்க்கைபுரிய யாருடைய விளக்கத்தையும்
எதிர்ப்பார்க்காதே !
உன்னை நீயே படித்துக்கொள் .
பிறவியைஅறிய யாருடைய வழியையும்
எதிர்ப்பார்க்காதே !
நீயே புதுவழி செதுக்கிக்கொள்.
ஞானங்கள்பெற யாருடைய அனுபவத்தையும்
எதிர்ப்பார்க்காதே!
நீயே பட்டு தெரிந்துக்கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக