சமாதானபுறாக்கள்
மசாலாவுடன் கலந்து
கொதித்துக்கொண்டிருந்தன உலையில் ;
அதன் நறுமணத்தை
நுரையீரல்முழுக்க நிரப்பியவாறும்
குவளையில் ஊற்றிவைக்கப்பட்டிருந்த
குருதியை பருகியவாறும்
பொறிபறக்க
தனக்கான
ஆயுதங்களை கூர்தீட்டிகொண்டே இருந்தான்
கொலைவெறியுடன்
புத்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக