புதன், 7 ஜூலை, 2010
ஐயப்பரும் புத்தரும் ஒருவரே
'ஹரி ' என்றால் திருமால் ,'அரன் ' என்றால் சிவன் .இவர்கள் இருவருக்கும் பிறந்ததால் இவர்களின் குழந்தைக்கு 'ஹரிஹரன் ' என்று பெயர் சூட்டினார்கள். இந்த ஹரிஹரன் தான் ஐயப்பன்.சபரி மலையில் எழுந்தருளியிருப்பவர்.சிவனை முழுமுதல் கடவுளாகக்கொண்ட சைவ சமயமும் ,திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைணவ சமயமும்.ஐயப்பன் என்ற புதிய இறையின் வருகைக்கு வித்திட்டிருக்கின்றன. எதிர் எதிர் சமயங்களாக இருந்த இந்த இருவேறு எதிர்நிலை சமயங்களின் சங்கமம் எப்படி நேர்ந்தது ?.'ஹரியும் அரனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயிலே மண்ணு 'என்று சமயங்களுக்கு சமரச வார்த்தைகளால் முலாம் பூசினாலும் சமய அரசியல் என்பது உள்ளூடாக விரவி இருந்துள்ளது.இந்நிலையில் 'சரணம்' என்ற வார்த்தை அதிக புழக்கத்தில் ஐயப்பவழிபாட்டில் இருப்பதை பார்க்கிறோம். இந்த வார்த்தை கூர்ந்து கவனிக்கவேண்டிய வார்த்தை. பெளத்த சமயத்தின் தலையாய மந்திரச் சொற்களில் ஒன்றான 'சரணம்' என்ற வார்த்தை சேரநாட்டில் எப்படி வேறு சமயத்தின் அடையாளமானது என்பது வினா? ஆகா புத்தரும் ஐயப்பரும் ஒன்றாக இருக்கக்கூடும் என்பது யூகம் . மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கடல் பகுதி வழியாக இந்த பெளத்த மதம் பரவியிருக்க கூடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக