வியாழன், 29 ஜூலை, 2010

நிரபராத மரங்கள்

கொடூரர்களோடும்
கூர் ஆயுதங்களோடும்
பவனி வந்த -அந்த
நடமாடும் தூக்குமேடை
தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
தூக்குதண்டனை கைதிகளை
பொதுமக்கள் முன்னிலையில்
ஒருவர் பின் ஒருவராக
வெட்டிச் சாய்த்து
கொன்று குவித்தது .

இவர்களின் குருதி
இங்கே வழிய
பெற்ற மகவுகளை
பறிகொடுத்த இயற்கை அன்னை
கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக