வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் என்றொரு "கதைப் பொக்கிஷம் "-1

"ஞாபம் வருதே ஞாபகம் வருதே" என்று ஒவ்வொருவரும் நினைவு கூறும் பலகாலங்களில் ஒரு பொற்காலம் எல்லோருக்கும் இருக்கும் .பொற்காலங்களை பொக்கிசங்களாக உணர்கிறவர்களால்தான் வெற்றிக்கொடிகட்டமுடியும்.பெரும்பாலும் எல்லோராலும் மறக்கமுடியாத நாள் பிப்ரவரி பதினான்காக இருக்கலாம்.ஆனால் என்னால் மறக்கமுடியாத நாள் நவம்பர் பதினான்குதான்.ஆம் 'தகிதா' என்ற பதிப்புக்குழந்தை ஜனித்து தவழ்ந்த தினம்தான் அன்று .மேலும் அந்தநாளை பிறவிகள் தாண்டி நினைவுப்படுத்துகிறவர் ஒருவர் .அது வேறுயாரும் அல்ல "கதைப்பொக்கிசம்" இயக்குனர் திரு சேரன் அவர்களே.

ஒரு நாள் ஒரு மதியப்பொழுதில் அவர் படபிடிப்பில் பரபரப்பாக இருந்திருக்கக்கூடும் அலைபேசியில் எதிர்ப்பார்போடு அழைத்த என் அழைப்பிற்கு மறுமுனையில் பரவசமூட்டும் பதில்கள் எனக்காக காத்திருந்தன .'சொல்லுங்க தோழர்' என்று என் அழைப்பிற்கு வரவேற்பை வைத்தார்.'தோழர் தகிதா என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கி இருக்கிறேன்...' என்று என் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னால் திடீரென்று ஒரு ஆச்சர்ய வெடி ஒன்றை வெடித்ததும் மகிழ்ச்சியில் நன் திக்குமுக்காடிப்போனேன். 'உங்கள் தகிதா பதிப்பகம் சேரனின் புத்தகத்தை எல்லாம் பதிப்பிக்காதா' ?என்ற கேள்வியைக்கேட்டதும் மகிழ்ச்சியில் சில வினாடிகள் ஊமையாகிப்போனேன்.

எந்த யூகங்களுக்கும் இடம்தாராமல் உடனே ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என்று கேட்டேன். 'என்ன நிகழ்வு? எதற்காக நடக்கிறது? யார் நடத்துகிறார்கள் ? என்பதை அறிந்ததன் காரணத்தால் தான் ஒப்புதல் தந்தேன் , உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் ' என்ற பதில் தகிதா குறித்து முகநூலின் வழி முழுமையாக அறிந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. மேற்கொண்டு நான் என்ன கேட்பேன் என்பதை புரிந்துகொண்டவராய் 'வருகை, தங்கல் குறித்த கவலைகள் உங்களுக்கு வேண்டாம் ,நீங்கள் விழா ஏற்பாட்டை கவனியுங்கள்' என்றார்.தோழர் சேரனின் அந்த ஆறுதலான ஊக்கமூட்டும் பதில் தகிதாவின் வெற்றிவிழாவிற்கு என்னை அரக்கத்தனமாக உழைக்க வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக