வெள்ளி, 17 டிசம்பர், 2010

'தகிதா பதிப்பகம்"

"என் கைரேகை படிந்த கல்" என்ற கவிதை தொகுப்பை 'தகிதா பதிப்பகம்" பெருமையுடன் வெளியிடுகிறது. இந்நூலின் ஆசிரியர்"யாழி" என்ற புனை பெயரில் சிற்றிதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும்,வார இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கும் கிரிதரன் ஆவார் . சிறந்த படைப்பாளர்:சிறந்த விமர்சகர்: புதிய ழ கவிதை சிற்றிதழின் இணை ஆசிரியர்.மேலும் " யாழிசை" என்ற பெயரில் அலைபேசி வழி கவிதை இதழ் நடத்திக்கொண்டிருக்கும் நல்ல தமிழர்.அன்னாரை தகிதா பதிப்பகம் வாழ்த்தி வரவேற்கிறது. இவரது நூலின் அட்டையை வடிவமைத்தவர் எமது பதிப்பகத்தின் அனைத்து நூல்களுக்கும் முகப்பு வடிவமைத்து தரும் திரு அனந்த பத்மநாபன் ஐயா அவர்கள் ( பி ஆர் ஆர் ) .எமது கலை பயணங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அன்னாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாகிக் கொள்கிறோம். நீங்களும் வாழ்த்துங்கள் தோழர்களே !... வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக