வெள்ளி, 17 டிசம்பர், 2010

காதல் குறட்பாக்கள்

நீருக்கு வண்ணம் கொடுத்த
நிலமானாய் நீ.
நிலத்திற்கு ஈரம் கொடுத்த
நீரானேன் நான்

நீரும் நிலமுமாய்க்
கலந்த பிறகு
உன்னோடு கொள்ளும் சிணுங்கல்களில்
சுகிக்கிறேன்
சொர்கத்தின் சுகத்தை

குறள்:1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியை தன்னார் அகத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக