நீருக்கு வண்ணம் கொடுத்த
நிலமானாய் நீ.
நிலத்திற்கு ஈரம் கொடுத்த
நீரானேன் நான்
நீரும் நிலமுமாய்க்
கலந்த பிறகு
உன்னோடு கொள்ளும் சிணுங்கல்களில்
சுகிக்கிறேன்
சொர்கத்தின் சுகத்தை
குறள்:1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியை தன்னார் அகத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக