வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் பேசுகிறார்: யாழ் நூலக எரிப்பின் சாம்பல் மீண்டும் தமிழுக்கே உரமாகும்

மணிவண்ணன் தமிழ் பற்றி பேசும்பொழுது ,இலங்கையைப் பற்றி பேசும்பொழுது, அந்த நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் எரித்தது தொடர்பாக பேசும் பொழுது , அவர் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. ஆனா கவலை படாதீங்க மணிவண்ணன். எரிக்கப்பட்டது பிரதிகள்தான் உண்மை வந்து வெளியிலே கெடக்கு. உண்மையான பிரதிகள் உண்மையான எழுத்து இங்கே கெடக்கு. அப்புறம் நீங்க வந்து அது எரிக்கப்பட்டதா ஏன் நெனச்சி அழுகிறீங்க .அந்த சாம்பல் நமது விதைகளுக்கு உரமாகப் பயன்படப் போகிறது. அதன் மூலம் நூற்றுக்கணக்கான பிரதிகள் நூற்றுக்கணக்கான புதிய புதிய சரித்திரத் நூல்களை இளைஞர்கள் எழுதத்தான் போகிறார்கள் என்று நினையுங்கள்..அதற்கு நீங்கள் விதைச்சிருக்கிற இந்த விஷயம் ,அந்த ஒரே ஒரு காரணத்திற்க்காக ஆரம்பிச்சிருக்கீங்க என்ற விஷயம் என்னை ரொம்ப வெகுவா பாதிச்சிருச்சி.

நான் தெரிஞ்சோ தெரியாமலோ தான் கேட்டே உங்ககிட்டே,என்னோட புத்தகத்தை தகிதா பதிப்பகம் வெளியிடுமான்னு? ஆனா சத்தியமா சொல்றே உங்களுக்காக ஒரு புத்தகம் எழுதப்போறே. அந்த புத்தகத்தே தகிதா பதிப்பகம் தான் வெளியிடப்போகுது . அதே கண்டிப்பா நான் எழுதுவேன். ஏன்னா எனக்கு நெறைய ஆசைகள் இருக்கு எழுதணும்னு .ஏன்னா சினிமாவுலே எல்லாத்தையும் சொல்ல முடியலே. ஏன்னா சினிமா இப்ப சிக்கி சீரழிஞ்சி இருக்கு. எந்தப் படத்தை எடுக்கணும்னு கொழப்பமா இருக்கு. எல்லா நல்ல படம்றீங்க பொக்கிசத்தே. ஆனா ஓடலே.மாயக்கண்ணாடி எடுத்ததிலேயே பிரமாண்டமான படம் என்று அவரு மைக்கே பிடிச்சி பேசுறாரு.ஆனா ஒருத்தன் வரலே திரையரங்கத்துக்கு.

நீங்க பாத்தீங்களா? நீங்க மட்டும் பாத்தா! கோயமுத்தூரே பாத்த்தாதானே அடுத்த படம் எடுக்க முடியும். அதனாலே எடுக்கமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கையைப் பற்றி திரைப்படத்தில் சொல்லமுடியாத விஷயங்கள் நிறைய இருக்கு. நம்ம வாழ்க்கை பற்றிய நிறைய கேள்விகள் இருக்கு . இதெல்லா புத்தகங்களா வெளிவரணும். இன்னைக்கு நெறைய வழி இருக்கே, நிறைய பேசுறாங்க நிறைய சொல்றாங்க அப்புறம் ஏன் எழுதனும்மு கேட்கலாம் .காலத்தால் அழியாத பதிவுகள் புத்தகங்கள் மட்டும்தான்.

(சேரன் நாளையும் பேசுவார்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக