வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதாவின் அடுத்த வெளியீடு - இயற்கைசிவத்தின் 'கட்டைவிரல்களின் கல்லறை '

தகிதாவின் அடுத்த வெளியீடாக செஞ்சியை சார்ந்த நவீனப் படைப்பாளி இயற்கைசிவத்தின் 'கட்டை விரல்களின் கல்லறை' என்னும் கவிதை நூல் வெளிவருகிறது. கலை உலகில் சிறந்த புகைப்படக் கலைஞராக அடையாளப்பட்ட இயற்க்கைசிவம் அவர்கள் இத்தொகுப்பின் மூலம் சிறந்த புத்திலக்கியப் படைப்பாளியாக தன் முத்திரையை பதிக்கிறார். செஞ்சியை ஆண்ட மன்னனான 'தேசிக்கு ராஜா' என்ற பெயரில் அலைபேசிவழி குறுங்கவிதை இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் ஆசிரியரும் இவரே. இவர் சிறந்த திரை விமர்சகனாக விளங்கி பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.மொழிப்பற்றும், கலையார்வமும், கொண்ட இந்த படைப்பாளரின் வயது முப்பது. இவர் தெள்ளுத் தமிழில் பேசக்கூடிய சிறந்த பேச்சாளரும் ஆவார்.இவ்வாறு பல்துறை கலையார்வம் கொண்ட இப்படைப்பாளியின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவதில் தகிதா மகிழ்வு கொள்கிறது. பாராட்டியும் கெளரவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக