வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் பேசுகிறார்: நல்ல ரசனையை உருவாக்க தவறிவிட்டோம்

தவமாய் தவமிருந்து பாத்து எங்க அப்பாவை பாத்தேன், நா இப்படிப்பட்ட அப்பாவா வாழலையேன்னு வெக்கப்படறேன், .எங்கப்பா இப்படி இல்லையே ,இப்படிஎல்லா நிறைய கேள்விகளோடு வந்தவங்க நெறைய பேர் .ஒவ்வொரு படங்களும்,என் படங்கள் மட்டும் கெடையாது.ஒவ்வொருத்தரோட படங்களும் இருக்கு.பருத்தி வீரன் எடுத்துக்கிட்டாலும், சுப்ரமணியபுரம் எடுத்துகிட்டாலும் வன்முறை எதற்கு ?வன்முறையினாலே
ஒருத்தரோட வாழ்க்கை எப்படி வீணாகுது? .ஏதாவது ஒரு வகையில் ஒண்ணு சொல்லணும் .ஏதோ ஒரு வகையில் நம்ம சித்தன் ஐயா சொன்ன மாதிரி நின்னு ப்ரோசிங் மாதிரி கேமராவே பாத்து பாத்து பேசக்கூடாதே ஒழிய ஆனா அந்த திரைப்படம் வீட்லே போயி உங்களை பேசவைக்கணும் .ஏதாவது யோசிக்க வைக்கணும் .

ஆனா அதுலே ஒரு ஆபத்து இருக்கு.சித்தன் ஐயா நீங்க கொஞ்சம் கவனிக்கணும்.நானும் உங்கள் மாதிரி மக்கள் பேசட்டுமே , திரைப்படத்திலே நா ஏன் பேசணும் ,மக்கள் போயி யோசிக்கட்டும்.நான் பிரச்சனையே மட்டுமே சொல்லுவேன் , முடிவு ,கருத்து எல்லா சொல்லமாட்டேன்னு சொல்லிட்டுத்தா ரெண்டு படம் எடுத்தேன்.ஒண்ணு மாயக்கண்ணாடி,இன்னொன்னு பொக்கிஷம் .ரெண்டுலயும் அவ்வளவு கருத்துக்கள் அடங்கி இருக்கு.ஒரு இளைஞனை ஒரு சமூகம் எப்படி சீரழிக்கிறது.எந்தெந்த வழியிலெல்ல சீரழிக்குது,அது மனசுக்குள்ளே பேராசை என்ற விதையை எப்படி விதிக்குது,அந்த விதை அவனிடம் எவ்வளவு பெரிய கிளர்ச்சியை உருவாக்கி எத்தகையை சீரழிப்பை அவனது வாழ்வின் வழித்தடங்களில் நிகழ்த்துகிறது என்று சொன்னே.சுற்றுப்புறம் பூரா பாருங்க நெறைய விளம்பர போர்டுகள் ,நெறைய நிறுவனங்கள்,ஆசைக் காட்டும் அழகிகளோடு உள்ள விளம்பர பதாகைகள்.இதெல்லா வச்சிக்கிட்டு நீ டிவி வாங்கு, நீ பைக் வாங்கு,..இப்படி எல்லாத்துக்கு பத்தாயிரம் இருபதனாயிரம் கட்டுனா போதும்.அதுக்கப்புறம் கடன் கட்டறது பத்தின வழியை சொல்லித்தர மாட்டான். ஆனா கடன் கொடுக்கறதுக்கு உங்கள் ஈசியா கூப்பிடுது .நாமும் கடனே உடனே வாங்கி அப்பா இருக்குற தாலியே அடகு வச்சி பைக் வாங்கிர்ரோ. ஆனா மாசம் மாசம் டியூ கட்டும்போது மனசு வலிக்குதில்லே,அதே பத்தி யாரும் யோசிக்கிரதில்லே.

ஆனா அந்த விளம்பரத்துக்கு மயங்குதனாலே அந்த நிறுவனம் நம்ம வீட்டுக்குள்ளே வந்து விழுந்திருச்சி .டிவி மூலமாவும் செல்போன் மூலமாகவும். .செல்போனே எடுத்துகிட்டீகன்னா அவ்வளவு மெசேஜ் நாம்ம அனுமதி இல்லாமே வருது. இதே வாங்கு அதே வாங்கு அது வாங்குன்னு.அப்படி ஆசைப்பட்டவன் என்ன பண்றான்,தான் பார்க்கிற வேலையிலே,தான் நேர்மையாகப்ப்பார்த்த வேலைக்கான சம்பளம் கிடைக்கும் பொழுது, அதை மீறி வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்கிறான். அந்த வாழ்க்கையை உருவாக்கும் போது .அதற்கான பணத்தை தேடுவதற்கு தான் பார்க்கும் வேலையிலோ,அவன் இருக்கும் இடத்திலோ ஒருவன் தப்பு செய்யா ஆரம்பிக்கிறான். அப்படித்தான் லஞ்சம் வாங்க ஆரம்பிக்கிறான்,அப்படித்தான் தப்பு பண்ண ஆரம்பிக்கிறார், அப்படித்தான் கையூட்டு நடக்குது; அப்படிதா எல்லாமே நடக்குது.ஆகவே ஒரு இளைஞனை அவை சிதைக்கின்றன. ஒரு நேர்மையான வாழ்க்கைக்கு அவன் தாயாராக இல்லை. ஓவர் நைட்லே ஹீரோவாக நினைக்கிறான்.சினிமாவுலே மூணு நிமிசப்பாடல்லே பணக்காரனானமாதிரி.அஞ்சி நிமிச போட்ட பாட்டோட மாண்டேஜ் முடியறதுக்குள்ளே வாழ்க்கையில் எவனாலயும் முடியாது. ஒருவன் ஒரு வருசத்துலே முன்னேரினான்ன அடுத்த வருஷம் ஜெயிலுக்குள்ளே இருப்பன்.அதெ அவனாலே தக்க வைக்க முடியாது. அது சீட்டு கம்பெனி நடத்துறவங்க நிலைமையெல்லா. இல்லையா? அப்பேற்பட்ட விஷயத்தை வெறும் காட்சிகளா சொல்லிட்டு எந்த கருத்தையும் கேமராவே பார்த்து சொல்லலே. மாயக்க்கண்ணாடியில் எந்த கருத்தையும் நேரடிய மக்கள் கிட்டே சொல்லலே. ஆனா காட்சிகளுக்குள் அடக்கி வச்சி நீ வீட்லே போயி புரிஞ்சிக்கடானு சொன்னே அவனுக்கு படமே புரியலே.


உங்கள் மாதிரி முன்னோர்கள், பெரிய டைரக்டர்ஸ் எனக்கு உலகத்திரைப்பட விழாவிலே சொன்னாங்க ." மக்கள் கிட்டே புரட்சி பண்ணக்கூடாது .அவங்ககிட்டே பேசக் கூடாது. படத்தில் பிரச்சனைகளை சொல்ல வேண்டும் தீர்வை சொல்லாதே" என்று சொன்னாங்க. அட நல்ல விசயமா இருக்கே. ஆவனவன் கருத்துக்கு விட்டுவிடுதல் அதுதானே நியாயம் அதுவும் சரியாகப்பட்டது.என்னன்னா தீர்வு சொன்ன அது என்னுடைய கருத்து தீர்வு சொல்லாமே விட்டுட்டேன்ன நீ அதே யோசிச்சி உனக்கான கருத்தே நீ தேடிக்குவே. அதான் நியாயமான விஷயம் .

இப்ப எங்கே தப்பு நடக்குதுன்னா.அது போல திரைப்படங்களைப் பார்த்து அதை அலுசுவதாய் நாங்கள் உங்களை வளர்க்க வில்லை. உங்களை நாங்கள் அப்படி உருவாக்கவில்லை. அந்த ரசனை மாற்றத்தையும் அந்த ரசனை உருவாக்க நாங்கள்தவறி இருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக