வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதாவின் அடுத்த வெளியீடு - கவிஞர் நாணாற்காடனின் 'சாக்பீஸ் சாம்பலில்'

கவிஞர் நாணாற்காடன் என்ற அற்புதமான ஹைக்கூ படைப்பாளியின் மூன்றாவது தொகுப்பு தான் இந்த 'சாக்பீஸ் சாம்பலில்'. இவரின் முதல் நூல் 'கூப்பிடு தொலைவில்'(காதல் கவிதைத் தொகுப்பு),இவரின் இரண்டாவது நூல் 'பிரியும் நேரத்தில்' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) .இவரின் இரண்டாவது நூல் சென்னை -தாராபாரதி விருதினை பெற்றுள்ளது. தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நேர்த்தியான ஹைக்கூ படைப்பாளர்களில் ராசிபுரத்து கவிஞரான நாணாற்காடனும் ஒருவர் .ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றும் இவருக்கும் அப்படியொரு தமிழ்ப் பற்று.இவர் புதுக்கவிதையையும் நவீனக் கவிதைகளையும் எழுதிவரும் சமகாலப் படைப்பாளி .நிறைய கவிதைகளை இந்தியிலிருந்து தமிழுக்கு கொண்டுவந்து சேர்த்த மொழிபெயர்ப்பு தொனியாக விளங்குகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் இதழ்களின் தொடர்ந்து எழுதிவரும் புத்திலக்கிய படைப்பாளி. கன்னடம், இந்தி ,ஆங்கிலம், தமிழ் , மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பரிச்சயம் மிக்க பன்மொழி வித்தகர்.அவரின் அற்புத படைப்பாம் 'சாக்பீஸ் சாம்பலில்' என்னும் நூலை தகிதா பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக