வெள்ளி, 17 டிசம்பர், 2010

புதியழ - வில் இடம்பெற்ற கவிதைகளின் சிதறல்கள் சில

கவிதையைக் கழுவாதீர்கள்-அது
அழுக்குகளுடனும்
கசங்களுடன்
அப்படியே இருக்கட்டும்!
-பூ.ஆ .ரவீந்திரன்

தாய்மொழியை
வளர்ப்பதும் பாதுகாப்பதும்
ஆயிரம் தாய்களை
பாதுகாப்பதற்கு சமம்.
-சேரன்

உழைப்பாளிகளின் உதிரத்தால்
தொழிலாளர்களின் வியர்வையால்
தியாகிகளின் தியாகத்தால்
சிவந்த பூமி
இன்னும் சிவந்தது படைப்பாளிகளால்.
சூரியகாந்தன்

கவிதைகளின் தரமும்
வெளிப்பாட்டு உத்திகளும்
செம்மை.
ழ மாற்றங்களைக் கொண்டுவரும்
மாறுபட்ட இதழ்
-இந்திரசித்து

பந்துகூட அடித்தால்
பதிலுக்கு எகிறும்
வந்துவிடு தமிழா!
வரலாறு படைப்போம்
-வேலுமணி

பாலாற்றுக்கரையோர
பூக்களைச்சூடுவதை விடுத்து
பக்கிங்ஹாம் கால்வாயின்
காகித பூக்களையா சூடுவது
-கோவைஅன்பு

அம்மா என்றே
அழகிய கன்றும்
இம்மா உலகில்
இனிக்கும் தமிழில்
அன்னை தன்னை
அழைத்தே மகிழும்
-விசயலட்சுமி

அன்றிருந்த தாயே !
அவனிக்கொருமொழியாய்
நின்று இருந்தாய்
காரியத்தை நேரே
எதிர்கொண்டு வென்றிருந்தாய்...
-இளங்கீரன்

தரையில் குழிதோண்டி
புதைத்தாலும்
தன்னைத்தானே புதுப்பித்து
மீண்டெழும் திறன் உண்டு
தாரணி ஆண்ட தமிழ்மொழிக்கு .
-முருகன்

வற்றாத கருத்துற்று
மடைதிறந்து
மனமென்ற தேசத்தில் ஓடும்போது
நற்றமிழே உனைவிதைத்தேன்
உள்ளமெல்லாம் நாமணக்க
நீ செழித்த வாழ்வு கொண்டேன்
-இளங்கோவன்

மொழியை அழித்தல்
முழியை மழித்தல்
விழியை இழந்தால்
வழியை ஒழிந்தாய்
-கலாம் காதிர்

மழலைத்தமிழ் பேசாத
எனக்காய்
தமிழ் மொழித்தாய் ஒருத்தாய்
பேதத்தால் கண்ட அங்கலாய்ப்பாய்
உள்ளதே பலதாய்
-சாந்தி வின்சென்ட்

ஒரு இனம் அழிந்ததே
குருதியில் மிதந்ததே
என்ன செய்துகொண்டிருந்தோம்.
இலவசங்களின் மயக்கத்தில்
நம் ஆண்மைகளை அல்லவா அழுக்காக்கினோம்
பொழுதுபோக்கு
பீடைகளைத் தொழுது
நாசமாய் போனோம்
-அமுல்செல்வி

தலைதூக்கி
தடம் பதிக்க
தடையெல்லாம் தூளாக்கி
தந்ததும் எம்மொழியே!
-வின்சென்ட் ராய்

மெளனத்
தமிழ் பேசி
புன்னகை புரிகிறது
பூக்கள்
-பூர்ணா

தமிழால் உணர்வால்
தகித்திடும் தலைமை
தாங்கிடும் சூரியனே!
உலகால் செம்மொழி
உன்னதம் அடைந்திட
இலங்கிடும் தமிழ் மனமே!
-இரத்தினப்பிரியன்.

நீக்கமற நிலைத்திருந்து
வாழ்வாங்கு வாழ்ந்திருந்து
வானளவு உயர்ந்திருந்து
செந்தமிழே! -பத்ரிநாராயணன்

விழிவிலக்கை
அணைத்துவிட்டோம்
விரல்களையும் இழந்துவிட்டோம்
இனிமேலும் வாழ்கின்றோம்
தமிழுக்காய் தமிழனுக்காய்
-குருசாமி

வீரம் பேசிய
போர்க்களமும்
ஈரம் பொங்கிய
ஒற்றுமையும்
எம் இனத்தின் முகவரியே
-தமிழ்வரதன்

கனவுகள் மெய்ப்படும்
காலமடா-தமிழ்
கவிதைகள் வென்று
போடும் தாளமடா!
-சோலாச்சி

தாயிடம் பால்குடிக்க
பிள்ளைக்கு அனுமதி வேண்டுமா?
-புதுவை ஈழன் .

தமிழுக்காய் உன்னை விதைப்பாய்
தமிழுக்காய் கணை தொடுப்பாய்
தமிழுக்காய் தலை நிமிர்வாய்
தமிழுக்காய் சிலை வடிப்பாய்
-நீலமேகம்

அன்னை மார்பில்
அழுந்திய வாயின்
அம்மாவென பசிநிறைத்த
முழக்கம்
-குமரேசன்

அந்நிய மண்
தமிழ் சரித்திரம் வியக்கிறது
இந்திய மண்
திட்டமிட்டே மறைக்கிறது
-தமிழாளி

துட்டுக்காக
தமிழை வெட்டிக்கொல்லும்
மேட்டுக்காரர்களால்
கெட்டுபோய் நிற்கிறது
-உதயக்குமாரன்

திரைக்கடல் ஓடி
திரவியம் தேடும்
தமிழன்
தாய்ப்பாலுடன்
தமிழ்ப்பாலருந்தும்
இனியன்
கம்பன் வழியன்.
-பத்மாவதி

கூழுக்காய் பாலுக்காய்
வேலைக்காய் வேட்டிக்கை
அலையாய் அலைந்ததில்லை
தமிழை தமிழுக்காய்
-தேனம்மை


அச்சமில்லை என்று
பகைவர்தமை துச்சமாக்கினாய்
விட்ட உன் சுவாசம்
வாழ்ந்த உன் வாழ்க்கை
தமிழுக்காய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக