வெள்ளி, 17 டிசம்பர், 2010

காதல் குறட்பாக்கள்

ஊடலில்
தோற்றவரே
வெற்றிபெற்றவராக
அறிவிக்கப்படுகிறார்.
ஏன் தெரியுமா?

கட்டில் போரில்
காயங்கள் செய்தவரைவிட
காயங்கள் பெற்றவரே
வாகை சூடுவதால் !

குறள்: 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக