வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் பேசுகிறார் :"புத்தகங்கள் காலத்தின் விலாசங்கள்"

புத்தகங்கள்தான் நமது பதிவுகள். நமக்கு எப்படி தெரியும் நம் முன்னோர்கள் பற்றி? முன்னோர்கள் வாழ்க்கையைப் பற்றி? தமிழ்கள் வரலாறு பற்றி? எப்படி நாம் தோன்றினோம் என்பது பற்றி, எப்படி தெரியும்? பதிவுகள் வேணும்,பதிவுகள் எழுத்துக்கள் மூலமாகத்தான் கொண்டுவர முடியும்.நீங்க படம்புடுச்சி காட்டுனா கூட எங்கேயோ துருபுடுச்சி அழிஞ்சி போயிடும். பதிவுகள் எழுத்துக்கள் மூலமாக நூலகங்களில் பாதுகாக்கப்படவேண்டும்.

எனக்கு எப்படி சொன்றதுன்னு தெரியாது. ஆனா சில ஆட்சியாளர்கள் சில நேரங்கள்லே மிக நல்ல விசயங்களை செஞ்சிருவாங்க .அதுலே ஒண்ணு வந்து, சென்னையில் கட்டியிருக்கக்கூடிய நூலகம். மிகப் பெரிய நூலகம் அது. அது பாதுகாக்கப்பட வேண்டிய நூலகம். மலேசியாவில் பாத்தப்ப நெனச்சே ,இந்த மாதிரி நூலகம் வந்து நம்ம நாட்டுக்கு தேவையாச்சேன்னு. நெஜமாவே அப்படி ஒரு நல்ல விஷயம் நடந்துருச்சி. அதன்மூலம் நல்ல புத்தகங்கள் பாதுகாக்கப்படும் பொழுது பழைய விஷயங்கள் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்தும்.

நாம பின்னாடி வர்ற சந்ததிக்கு என்னத்தே விட்டு போறோ ? நம்முடைய அடையாளத்தைதானே. ஒரு அப்பன் நல்லவனா நடந்திருந்தானா அது பின்னாடி வர்ற பிள்ளைகளுக்கு அடையாளம். கெட்டவனா நடந்த தந்தையின் பெருமையை பிள்ளைகள் பேசமாட்டார்கள்.எங்கப்பா எங்களுக்காக கஷ்டப்பட்டர்ர்.எங்கப்பா வந்து எங்களுக்காக வருத்திகிட்டார்,என்று சொல்லும் போதுதான் அது வரலாறாகவும் அடையாளமாகவும் மாறுது. அதன் வழியில் தான் இந்த புத்தகங்கள் தான் நாம விட்டுச் செல்ற விஷயம்.

இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு நெறைய பிரசர், நிறைய கேள்விகள்,நெறைய டென்சன் ,அவர்களுக்கு ஒரு காலத்திலே வெறும் கேள்விகள் மட்டுமே விஞ்சி நிற்கும். விடைகளே இருக்காது. அந்த விடைகளை இந்தப் புத்தகங்கள்தான் தீர்த்து வைக்கும் .ஒரு நாளைக்கு திரும்ப இந்த இளைஞர் கூட்டம் முழுக்க பழைய வாழ்க்கை எப்படிடா வாழ்ந்தாங்க? , அவ்வளவு நிம்மதியா அந்த காலத்துலே எப்படிடா வாழ்ந்தாங்க? இப்ப எல்லா பிரசர்லே செத்துகிட்டிருக்கமேன்னு தேடி அலைவாங்க.அப்படி அலையும் போது அவர்களுக்கு விடைசொல்லப் போவது முன்னோர்கள் எழுதிய puththagankal தான். அவர்களது வாழ்க்கை முறை சார்ந்த புத்தகமாகத்தான் இருக்கும்.

அன்னைக்கு இந்த சினிமாவில் கூட நீங்கள் ரசிக்கிற, நீங்க ஓட்டிக்கிடிருக்கிற, நீங்கள் ஆயிரம் ரூபாய் டிக்கெட் கொடுத்து பாக்குற படங்கள் எந்த விடையையும் தமிழ் நாட்டு மக்களுக்குச் சொல்லாது. தமிழகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய திரைப்படங்கள்தான் நமக்கான பதிலைத்ததரும்.
சேரன் நாளையும் தொடர்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக