வெள்ளி, 17 டிசம்பர், 2010

தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழா மற்றும் நூல் வெளியீட்டுவிழா

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தகிதா பதிப்பகத்தின் அறிமுக விழா மற்றும் நூல் வெளியீட்டுவிழா கோவையில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாச கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் திரு சேரன் அவர்களும் ,கௌரவ விருந்தினராக ஓவியர் பி ஆர் ராஜன் அவர்களும் ,கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். தஞ்சாவூர் கவிராயர் தலைமை தாங்க , விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு வேலாயுதம் முன்னிலை வகிக்க ,தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு பூ. ஆ ரவீந்திரன், யுகமாயினி ஆசிரியர் சித்தன், படைப்பாளர் நெய்வேலி பாரதி குமார், வழக்குரைஞர் விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, பதினைந்து புத்திலக்கியப்படைப்பாளிகளின் கவிதை மற்றும் கதை இலக்கியங்கள் வெளியாக உள்ளன. வாருங்கள் வருகை தாருங்கள். கூறுங்கள் வாழ்த்துக் கூறுங்கள். நெஞ்சம் நிறைந்து அழைப்பது உங்கள் தகிதா மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக