வெள்ளி, 17 டிசம்பர், 2010

சேரன் பேசுகிறார்:ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காது

எல்லோருக்கும் வணக்கம்.புத்தக வெளியீட்டு விழா. பன்னிரண்டு புத்தகங்களை ஒரே நேரத்தில் அச்சடித்து பதிப்பகமாக அறிமுகமாகிற விழா என்று தான் இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.இதற்கு முன்னால் நடந்த , அரங்கம் முழுவதும் கைதட்டிய விசயங்களையும் என்னைப்பற்றி மணிவண்ணன் அவர்கள் பேசிய விசயங்களையும் நான் மறந்துவிட்டேன்.ஆகவே அதைப்பற்றி பேசப்போவதில்லை.ஏன்னா அதுலே நெறைய முரண்பாடுகளும் இருக்கு.அதே அப்புறம் பேசறேன்.

முதலில் எனக்கு மணிவண்ணன் என்ற பேராசிரியர், இந்த தமிழ் ஆர்வலர், தமிழின்மேல் ஒரு பற்றோடு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் இங்கு பார்த்த போதுதான் தெரிகிறது,கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவர் வெறியோடு இருக்கிறார் என்பதை எனக்குக் காட்டியது. அந்த ஆர்வலரை, ,அந்த தமிழ்ப் பற்றாளரை எனக்கு முகப்புத்தகத்தின் மூலமாகத்தான் பழக்கம்.இந்த முகப்புத்தகம் என்று சொல்லக்கூடிய தளம் நிறைய நண்பர்களை , நிறைய ஆற்றல்மிகுந்தவர்களை ,வேறு வேறு விதமான சிந்தனையாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.அதில் முக்கியமான சிந்தனையாளர் திரு மணிவண்ணன் அவர்கள்.

நான் முகப்புத்தகத்தில் தினசரி எனது புகைப்படத்தை வெளியிடுவதுண்டு,நான் எடுத்த புகைப்படத்தை. சின்னச் சின்ன ஆசைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்தனியா இருக்கும்.ஒரு சில பேர் என்னதா நல்ல ஆளா இருந்தாலும் வீட்டுக்குள்ளே பாத்ரூமில் பாடிப்பாப்பாங்க,நம்மளும் ஒரு பாடகர்னு நெனச்சிகிட்டு.இப்ப நிறை பேர் நல்ல கவிஞர்களா இருந்தால் கூட சில ஆசையாலே பேனா எடுத்து நானும் எழுதினதுண்டு கவிதைன்னு. அப்படி சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது மாதிரி இந்த போட்டோ எடுத்து பார்ப்பேன் நான். எனக்கு நிறைய போடோ எடுக்குற ஆர்வம் உண்டு,சின்னவயசிலிருந்தே அந்த ஆர்வம் நிறைய இருந்தததனாலே .ஆனா எனக்கு கேமரா இப்பதா கிடைச்சுச்சு டைரக்டர் ஆனதுக்கப்புறம்.

ஆதனாலே இப்ப எடுத்து எடுத்து பழகுன அதுலே நல்ல இருக்கிற போடோடோக்களை முகநூலில் போடுவேன். போட்டுட்டு அதுக்கு கீழே சில வரிகளை எழுதுவேன்; தமிழ்லே எழுதுவேன். எனக்கு அந்த போட்டோ எந்த மாதிரி பாதிக்குது அப்படின்னு. அப்படி அந்த போடோ பாதிக்கிற வரிகளை போடுவேன். சும்மா சாதாரணமாத்தா ஆரம்பிச்சே ஒரு போட்டோ போட்டுட்டு அந்த போட்டோவுக்கு நாலு வரிவேணுமேன்னு போட ஆரம்பிச்சேன்.ஆனா அது வந்து தினசரி ஐம்பது ஐம்பத்தைந்து அறுபது பேர் கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பிச்சாங்க.ஆனா அறுபத்த்தஞ்சி பேரோட கருத்துக்களும் வேறுவேறான பார்வையில் இருந்தது. அது ரெம்ப அற்புதமான விஷயம்.

இந்த உலகத்திலே ஒரே மாதிரியான தாக்கம் எங்கேயும் இருக்க முடியாது. வேறுமாதிரியான தாக்கம், வேறே மாதிரியான பார்வை,ஓவொரு இடத்திற்கும் வித்தியாசப்படும். நம்ம வீட்லே பொறந்த அண்ணன் தம்வி அஞ்சு பேரும் வித்தியாசம். பின்னே எங்கிருந்து வெளியிலிருந்து வர்ற மருமக நமக்கு ஒத்துபோற ஆசைப்படற மாமியார நாம இருக்க முடியும் . அதுபோலதான்.அந்த வரிகள் அறுபத்தைத்து பேர் வித்தியாசமா இருக்கும் போது அதுலே எனக்கு அறிமுகம் ஆனவர்தான் மணிவண்ணன் சார்.அதுலே என்னோட போடோகளுக்கு அழகான கவிதைகளை எழுதிகிட்டே இருந்தார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நா அவருக்கு பதிலளிச்சே .பதிலளிச்சபோது அவர் அவரது கவிதை பற்றிய ஆர்வங்களை அவர் வெளியிட்ட போது. அப்படித்தான் எங்களுக்கு பழக்கமானது.ஒரு முறை என்னை வந்து அலுவலகத்தில் சந்திக்கலாமா என்று கேட்டார்.தாராளமாக வாங்க நா உங்களை சந்திக்கிறேன்னு சொன்னப்ப,வந்து என்னை அலுவலகத்தில் சந்தித்தார்

அப்புறம் அதைக்கூட முகப்புத்தகத்திலே வந்து மூணு நாட்கள் மூன்று பகுதிகள் எழுதினார் . என்னை சந்தித்த விஷயத்தை.எனக்கே தெரியாது அவர் அப்படி எல்லா என்னை பாத்தாங்கறது.நா சாதாரணமான மனுசனாத்தா அவரிட்டே பேசிக்கிட்டிருந்தே ,அவரு என்னியே ஒவ்வொரு அங்குலம் அங்குலமா அளந்து அளந்து எழுதி இருந்தார். அது எனக்கு தெரியலே,அவரு எழுதுனதுக்கப்புரம் நா கொஞ்சம் உசாராயிட்டே. இனிமே வந்து பாக்கரவங்ககிட்டே நாம சரியா இருக்கனும்ன்னு.அவ்வளவு பாத்து இதுபண்ணி எழுதினார். எனக்கு அதெல்லா தெரியலே. ஜோடனைகளோடு வாழ்வது எனக்குப் பிடிக்காத் விஷயம். இயல்பான மனுசனா இரு.அவ்வளவுதா .உனக்கு கோபம்வந்தா காட்டிடு,சந்தோசம் வந்தா சிரிச்சிறு, அழுகைவந்தா அழுதிடு.அவ்வளவுதான் ,அப்படியே ஒரு மனுஷன் வாழ்ந்துட்டாலே நிம்மதியா வாழ்க்கை இருக்குமுன்னு நெனக்கிறேன். எல்லாத்தையும் அடக்கிகிட்டு நேயாளியா வாழ நான் தாயாரா இல்லை.

(சேரன் நாளையும் பேசுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக